சிறப்புக் குறிப்பு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர்; மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கிகளில் ஒருவர். "வேரும் வாழ்வும்" என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாக மலேசியச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இவருடைய "மண்ணும் மனிதர்களும்" நூல் உலகெங்கணும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சிறந்த திறனாய்வாளர்; இலக்கியப் பேச்சாளர்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கோ. சாரங்கபாணி விருது பெற்றுள்ளார்.