
| ரமண மகரிஷி |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Saturday, 04 July 2009 23:44 |
|
[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]
இந்த நூலை முழுவதுமாக தட்டச்சு செய்து வழங்கியவர் ஓம். சுப்ரமணியம் அவர்கள். இப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நிழற்படங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிப்பிற்காக தொகுத்து வழங்கியவர் திரு.ஹரி கிருஷ்ணன் அவர்கள்.
பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.
அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.
பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.
குறிப்பிடத் தக்க நிகழ்வு.
கடைசியாக 1896-ஆம் ஆண்டில் தான் திடீரெனஒரு மாறுதல் ஏற்பட்டது.
ஆத்மானுஸந்தானம் - பாகம் 2
இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறிவிட்டது. மரண பயம் பறந்து போய்விட்டது. அவரது மனம் ஆத்ம தியானத்தில்ஆழ்ந்து, படிப்பைச் சிறிதும் நாடவில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை.விளையாட்டுத் தோழர்களையும்மறந்தார். விளையாடலும் சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை.சாந்தமும் வணக்கமும் நிறைந்தவரானார். உணவைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லை. நல்லதோ, கெட்டதோ கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார்.
கோவிலுக்குப் போவதிலே புதிய ஸ்ரத்தை ஏற்பட்டது. இதற்கு முன்னமெல்லாம், எப்போதாவது, ஸ்ரீ மீனாக்ஷ¢யம்மன் சந்நிதிக்குப் போவதென்றால் தமாஷாக, சினேகிதர்களுடன் போய்வருவது வழக்கம். ஆனால் இப்போது அப்படியில்லை! நாள்தவறாது, தனியே கோவிலை அடைந்து அம்மன், சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர் சந்நிதிகளில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு வருவார். "அறுபத்துமூவரது அன்பைப் போன்று எனது பக்தியைப் பெருக்கி நிலைக்கச் செய்ய அருள் சுரக்குமாறு ஒவ்வோர் சமையம் இறைவனை இறைஞ்சுவேன்.
ஆனால் அநேகமாக எதையும் அபேக்ஷ¢த்துப் பிரார்த்திப்பதில்லை. அகக் கடல் பொங்கி அருட்கடலோடு கலக்கும் இந்த ஹிருதய சங்கமத்தினால், கண்களில் நீர் துளிக்கும் அவ்வளவுதான் இன்பதுன்ப உணர்ச்சி ஒன்றும் கிடையது" என்று சுவாமி சந்நிதியில் தான் அடைந்த இன்பத்தை விளக்கியிருக்கிறார்.
அப்பன் அழைப்பு
இவ்வாறு ஆறு வாரங்கள் கடந்தன. வேங்கடராமனின் மாறுதலைக் கண்ட உறவினர்களுக்கு அது பிடிக்காமலிருந்தது ஆச்சரியமல்ல. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்ததும் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷயம் முற்றிவிட்டது.
அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடம் எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. மூன்றாவது முறையாக எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. புத்தகத்தைகட்டி மூலையில் போட்டுவிட்டு, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து," இப்படிப் பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. இவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அன்று மட்டும், அக்கேள்வி சுருக்கென்று தைத்தது.
" ஆமாம்; வாஸ்தவம் தானே. எனக்கு இங்கு என்னவேலை?" என்று சிந்தனை எழுந்தது. அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்னே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய §க்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தைவிட்டு எழுந்து," பள்ளியில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்", என்று அண்ணனிடம் சொன்னார். "அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விட்டுவா ", என்று கூறினார் நாகசாமி. "இதுவும் தெய்வ கடாக்ஷம் தான்" என்று நினைத்துக் கொண்டு வேங்கடராமன் அவ்வாறே ரூபாயை எடுத்துக்கொண்டார். பின்னர் 'அட்லஸ்' புத்தகம் ஒன்றை எடுத்து ரயில் மார்க்கத்தைக் குறிப்பாகப் பார்க்கவே மூன்று ரூபாய் போதும் என்று தோன்றியது. உடனே, ஒரு கடிதமெழுதி, பாக்கி ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைத்துவிட்டு புகைவண்டி நிலையத்துக்குப் புறப்பட்டார்.
கடிதத்தில் கண்டிருந்ததாவது: "நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக்காரியத்திற்கு ஒருவரும் விசனப் படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணச்செலவும் செய்ய வேனாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. இரண்டு இதோடுகூட இருக்கிறது. இப்படிக்கு..........."கடிதத்தின் வார்தைகளில் அவரது மனநிலை ஸ்பஷ்டமாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். "நான்" என்ற ஆரம்பம் சில வரிகளுக்கப்பால், ஏதோ ஓர் அ·றிணை 'இது' வாக மாறி, கடைசியில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஒருவரும் இல்லாமல் மறைந்துவிட, கடிதமும் கையெழுத்தில்லாமலே முடிந்துவிடுகிறது.
தந்தையை நோக்கி - பாகம் 3
ஆனால் அன்று வண்டி அதிர்ஷ்ட வசமாக நிலையத்தினின்றும் தாமதமாகப் புறப்பட்டது. எனவே அவர் பயணம் தடங்கலின்றி அமைந்தது.
விசாரித்திருந்தால் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வேறுவழி இருப்புப் பாதை உள்ளது என்பதையும் அதற்கான சத்தம் ரூபாய் மூன்றுதான் என்பது தெரியவந்திருக்கும். வண்டியில் பயணம் செய்யும்போது உடனிருந்த மௌல்வி வாயிலாக திருவண்ணாமலை செல்வதற்கு தனியே பாதை உள்ளது என்றும், அதற்கு திண்டிவனம் செல்லவேண்டியதில்லை என்றும் முன்பாகவே விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறவேண்டும் என்றும் கூறினார்.
ஒரு உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பாடு சமைக்க மதியம் வரை ஆயிற்று. உணவு அருந்திவிட்டு இரண்டு அணா தன் சாப்பாட்டிற்கெனத் தரலாமா என்று உரிமையாளரிடம் கேட்டார். “நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்று அவர் திரும்பக் கேட்டார்.”என்னிடம் இரண்டரை அணா” என்று வெங்க்ட்ராமன் சொன்னார். பணம் ஏதும் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் உரிமையாளர். அவர் மாம்பலப்பட்டு திருவண்ணாமலலை செல்லும் வழியில்தான் உள்ளது என்று விளக்கினார். வெங்கடராமன் மீளவும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து கைவசம் உள்ள பணத்திற்கு மாம்பலப்பட்டுவரை மட்டுமே சீட்டு வாங்கிக் கொண்டார்.
கோயிலின் பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அற்புதமான சுகானுபவம் ஏற்பட்டது. கோயில் முழுதும் எல்லா இடத்திலும் கண் கூசும் பிரகாசமான ஒளிவெள்ளம் தென்பட்டது. அந்த வெண்மை ஒளி வந்ததைப் போன்றே சிறிது நேரத்தில் மறைந்தது. வெங்கடராமன் ஆழ்ந்த தியான நிலையில் மூழ்கியிருந்தார். நேரம் போனதே தெரியாமல் அவர் மோன நிலையில் இருந்தார். நடை சாத்தும் நேரம் வந்ததும் வெங்கடராமனை எழுப்பினார்.கோயில் அர்ச்சகர் மூன்றுகல் தொலைவில் உள்ள கிலூர் (திருக்கோவலூர் வீரட்டம்) பூஜைக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் பணியாளர்கள் புறப்பட முற்பட்டனர். வெங்கடராமனும் அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கும் அவர் சகஜ சமாதி நிலை அடைந்தார். பூஜை முடிந்தபின்னர் அவர்கள் மீளவும் அவரை உணர்வு நிலைக்கு எழுப்பினர்.
ஆனால் அவருக்கு எவரும் உணவு அளிக்க முன்வரவில்லை. அர்ச்சகர்களின் போக்கைக் கண்டித்து மேளகாரர் தன் பங்கு உண்டைக்கட்டியினை ( பச்சையரிசிச் சாதம் உருண்டை அச்சில்) கொடுத்தார். தாகவிடாய் ஏற்பட்டபோது சற்று தூரத்தே உள்ள ஒரு சாஸ்த்ரி வீட்டிற்கு சென்று நீர் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
கூறினார்.
வெளியே வந்ததும், ஊரின் கீழ்க்கோடியிலுள்ள ஐயன் குளத்தருகே சென்று கீமூரில் கிடைத்த ப?ணங்கள் பொட்டலதை எடுத்து."இந்தக் கட்டைக்குத் தின்பண்டங்கள் எதற்கு?" என்று கூறிக்கொண்டே எறிந்து விட்டு நடந்தார். "முடி எடுக்கவேண்டுமா?" என்று வழியில் யாரோ ஒருவர் கேட்கவே, இதுவும் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.
அழகிய குடுமி அன்றோடு ஒழிந்தது. அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து ஒரு பீனத்திற்கான துண்டைமட்டும் கிழித்துக் கொண்டு, மற்றதையெல்லாம் சுருட்டி, பூணூலையும் மிச்சமிருந்த ரூபாயையும் சேர்த்துத் தூர எறிந்தார். Sநானம் செய்வது கூட அவசியம் என்று தோன்றவில்லை. நேரே கோவிலுக்குள் திரும்பிப் போகும் முன்னமேயே, திடிரென்று கனத்த மழை பெய்வித்து, அருணாசலேஸ்வரர் அவரை ஸ்நானம் செய்வித்தார். நேரே ஆயிரக்கால் மண்டபத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால் வெகு நாள்வரை அங்கிருக்கமுடியவில்லை. பால சந்நியாசியின் இளமையும் மௌன விரதமும் பலருக்கும் ஆச்சர்யத்தை விளைவித்தன. அவர் யார், எந்த ஊர், ஏன் இக்கோலம் முதலிய விவரங்களை அறிய ஆவல் கொண்டனர். இது தவிர, வி"மக்கார சிறுவர்களின் தொந்தரவும் அதிகமாயிற்று. ஆகவே, அவர் தனிமையான ஓர் இடத்தை நாடினார். கோவிலிலே பாதாளலிங்கம் என்ற ஓர் இருட்டுக் குகையைக் கண்டார்.
பட்டப் பகலில் கூட அதற்குள் செல்ல எல்லோருக்கும் பயம். ஆனால் பால சந்நியாசி பாதாள லிங்கத்தையே தெரிந்தெடுத்துத் தனிமையான தவயோகத்தில் ஆழ்ந்தார். அங்கே எத்தனை தினங்கள் தவங்கிடந்தனரோ ஒருவருக்கும் தெரியாது. பிறகு ஒரு நாள் பால சந்நியாசி அங்கிருப்பது எப்படியோ வெளியாயிற்று. அந்த யோக நிலைக்காட்சி கண்டோரை வியக்கச் செய்தது. பூர்வம், வான்மீக முனிவர் தம்மைச் சுற்றிலும் கரையான் புற்றுக்கள் மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காகத் தவம் செய்ததாகக் கூறுவர். பால யோகியின் தவ நிலையும் அதை ஒத்திருந்தது. பாதாள லிங்கத்தின் இருட்டிலேயே குடியிருந்த ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு யோக நிலையில் இருந்தவர் உடம்பு சரியான இரையாகக் கிடைத்தது.
உடம்பின் கீழ்ப் பாகம் பூச்சி அரித்து, ரத்தமும் சீழும் சேர்ந்து உறைந்து கட்டிக் கிடந்தது. ஆனால் அந்த பால சந்நியாசிக்கு இதனால் எவ்விதத் துன்பமும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த நி?டையில் அசையாது வீற்றிருந்தார். இந்தக் கா?¢யைக் கண்டோர் அனைவரும் பிரமித்துப் போயினர். பால சந்நியாசியின் தவ வலிமையை நிதரிசனமாக உணர்ந்த சாதுக்கள் அதுமுதல் அவரை மிகவும் மரியாதையாகக் கவனித்து வருவாராயினர். ஆயினும் பால யோகி அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். , சுப்பிரமணியர் கோவிலருகே சில காலம் இருந்தார். அதன் பக்கத்திலிருந்த பூந்தோட்டத்தில் சில நாட்கள்; இதன் பின் வாகன மண்டபத்தில் சில நாட்கள்; கடைசியாக மங்கை பிள்ளயார் கோவிலை அடைந்தார். பால சந்நியாசியின் மகிமையை உணர்ந்த உத்தண்டி நயினார் என்னும் சாது, இச்சமயத்தில் சுவாமிகளையடுத்து உபதேசம் பெறவேண்டி அவருக்குத் தொண்டுசெய்யத் தொடங்கினார். அப்போதும் கூட வி"மிகளின் தொந்தரவு நீங்கவில்லை. நயினார் இல்லாத சமய்ங்களில் துஷ்டப் பிள்ளைகள் பல இடையூறுகள் செய்வதுண்டு. இதைக் கூட அவர் பொருடள்படுத்துவதில்லை.
சுவாமிகளின் பெருமை நாளுக்கு நாள் எங்கும் பரவவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து போவாராயினர். இதனால் துஷ்டர்களின் கொடுமைகள் நின்றன. பக்தர்கள் கூட்டம் பெருகியதால் தியானத்துக்கு இடைஞ்சல் ஏற்படவே சுவாமிகள் அதைவிட்டுப் புறப்பட்டுத் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தார். அங்கே ஒன்றரை ஆண்டு காலம் சமாதி நிஷ்டையில் இருந்தார். இங்கே தான் முதன் முதலாக சுவாமிகளின் பூர்வோத்தரம் வெளியாயிற்று. கூட இருந்த பக்தர் ஒருவர் ஒரு நாள் சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஆனால், ஆராதனைக்குச் சற்று முன், கரியால் எழுதப் பட்டிருந்த சில வார்தைகள் சுவற்றில் காணப்பட்டன. "இதற்குத் தொண்டு இதுவே" என்பது அவ்வாக்கியம். "இது" என்பது பக்தர்கள் கொண்டுவரும் உணவைக் குறிப்பதாகும். இதைக் கண்டபின் ஆராதனை நின்றுவிட்டது என்று சொல்லத் தேவையில்லை. சுவாமிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் மூலம் தான் வெளியாயிற்று. இதன் பின்னர் அவ்வூர் தாலுக்கா அலுவலக சிரஸ்தாராக இருந்த ஒரு பக்தர் விடாப் பிடியாக சுவாமிகளின் பூர்வோத்தரத்தை அறிய முயன்றார். அதைத் தெரிவித்தால் ஒழிய, தாம் அவ்விடதைவிட்டு நகருவதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்.
முடிவில் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு எழுதிக் காட்டினார். "வேங்கடராமன்,திருச்சுழி" பக்தருக்கு இவ்வூர்ப் பெயர் புரியவில்லை. உடனே உவாமி பக்கத்திலிருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்றதிருச்சுழி என்னும் திவ்ய தலத்தின் பெயரைச்சுட்டிக் காட்டினார்.
தநயன் நிலையை தாய் அறிவதுசுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது விரைவில் நாடெங்கிலும் பரவி மதுரைக்கும் எட்டிவிட்டது.ஆராதனை செய்ய முற்பட்ட பக்தரான திருவண்ணாமலைத் தம்பிரான் மதுரையிலுள்ள ஒரு மடத்தில் சுவாமிகளின் மகிமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்.இதைக்கேட்ட பையன் ஒருவன் உறவினர்களிடம் ஓடிப் போய்," நமது வேங்கடராமன், திருவண்ணாமலையில், ஒரு சாமியாராய் இருக்கிறானாம்" என்று கூறினான். சுவாமிகளின் சிறிய தந்தையான நெல்லையப்பையர் உடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அப்போது ஒரு மாந்தோப்பில் சுவாமிகளின் வாசம்.
அந்நியர்களை அதிகமாக அங்கே அனுமதிப்பதில்லை. நெல்லையப்பரும் ஒரு சீட்டைக் கொடுத்தனுப்பினார். உள்ளே சென்றதும் அவர் கண்ட காட்சி அவர் மனத்தை உருக்கியது. பாலிய மைந்தனது மேனி அழுக்கடைந்து கிடந்தது. தலையிலே புதர் போல் மயிர்; கையில் வளர்ந்த நகங்கள். ஆனாலும் நெல்லையப்பர் மனத்தைத் தேற்றிகொண்டார். தங்கள் குடும்பத்தான் ஒருவன் இவ்வளவு உயர்ந்த ஞான நிலையை அடைந்ததைப் பற்றி அவருக்குத் திருப்திதான். ஆனாலும் ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் பக்கத்தில் இருக்குமாறு அவர் சுவாமிகளை வேண்டிக்கொண்டார்; சுவாமிகளுடைய சௌகரியங்களைக் குறைவில்லாது கவனிக்க அது ஏதுவாகும் என்றும் கூறினார்.
ஆனால் சுவாமிகளிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவரது அருட் பார்வையில் கூட எவ்வித மாறுதலும் தோன்றவில்லை. ஆளையாவது நேரில் பார்த்தோமே என்ற திருப்தி அவருக்கு. பையன் இனிமேல் ஊருக்குத் திரும்புவது கஷ்டம் என்று சுவாமியின் தாயாரான அழகம்மையிடம் அறிவித்தார்.
பெற்ற தாயின் மனம் அவ்வளவு எளிதில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா? தாயின் வருகை மூத்த பிள்ளை நாகசாமிக்கு லீவு கிடைத்தவுடன் தாயும் அண்ணனும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே பவழக் குன்றில் உள்ள ஒரு பாறையின் மீது சுவாமி படுத்திருந்தார். பார்வைக்கு எவ்வளவோ மாறுதல் அடைந்திருந்த போதிலும் தன் அருமைக் குழந்தையென்பது அன்னைக்கு உடனே தெரிந்துவிட்டது. நெல்லையப்பருக்குக் கிடைத்த பதில் தான் அன்னைஅழகம்மைக்கும் கிடைத்தது. நாள் தவறாமல் அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப் பிடியாக வேண்டினர்.
அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது.: அழுதார்;அரற்றினார்;வேண்டினார்; இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் நிச்சலமான ஒரு மௌனம்!
பக்கத்திலுள்ளவர்களுக்கு இது மிகவும் பரிதாபக் காட்சியாக இருந்தது. அன்னையின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது.பெறெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு கடிதத்தில் பின்வறுமாறு எழுதிக் கொடுத்தார்: "அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று." இதற்கு மேல் தாய் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. நாகசாமியின் லீவு முடிந்ததும் இருவரும் மனவருத்தத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினர். இதன்பின் சுவாமிகள் மலைமேல் பலகுகைகளில் மாறி மாறித் தங்கிவந்தார். விருபாக்ஷிக் குகையிலிருந்தபோது அந்த மடத்துத் தலைவர் சுவாமியைப் பார்க்க வருபவர்களுக்கு டிக்கட் வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவே அதையும் விட்டுக் கிளம்பிப் பக்கதிலிருந்த ஒருவெளியிடத்தில் தங்கினார். அப்போதும் டிக்கட் நின்றபாடில்லை.
கடைசியில் அந்தப் பிரதேசத்தையே நீத்து தொலைவில் உள்ள மற்றோர் குகையை நாடிச் சென்றார். இதற்குள் டிக்கட்டு வைத்த பக்தர் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி மன்றாடவே சுவாமியும் கருணை கூர்ந்து திரும்பினார். ஆனால் கோடை காலத்தில் விருபா?க்ஷிகுகையில் வெயிலின் கொடுமை வெகு உக்கிரமாகத் தாக்கிற்று. ஆள் இருக்க முடியாதாபடி உருக்கிற்று. ஆகவே அதைவிட்டு நீங்கி முலைப் பால் திர்த்தத்திற்கு அருகேயுள்ள மாமரக்குகைக்கு மாறவேண்டியதாயிற்று. விருபாக்ஷி குகையிலிருந்த போது உள்ளம் மலர்ந்துதெய்வீக பக்தி ததும்பும்' அருணசல அக்ஷரமாலை' என்னும் திவ்விய பாடலை அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிக்ஷைக்காக ஊர்க்குள் செல்லும் போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வருவாராயினர்.
இக்காலத்தில்தான் ஆங்கிலம் படித்த சிலரும் சுவாமிகளின் மகிமை தெரிந்து அடிக்கடி தரிசனத்துக்கு வருவாராயினர். இவர்களுள் சிலர் சுவாமிகளைப் பற்றியும் அவரது உபதேசங்களைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்திருக்கின்றனர்.
சேயர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில் பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம். "விசார சங்கிரகம்" என்னும் நூல் இந்தக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். , சிவப் பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின் உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஆத்ம ஞானோபதேசம் சிறந்து விளங்கியதென்பதை அதில் உள்ள கீழ்கண்ட பாகங்கள் நிதரிசனமாகக் காட்டுகின்றன:
"மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, 'நான் யார்' என்னும் விசாரமே முக்கிய சாதனம்." "நான் யார் ? சப்த தாதுக்களாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ர., கந்தம் என்னும் பஞ்ச வி"யங்களையும் தனித்தனியே அறிகின்ற ஞானேந்திரியங்களும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்னம், ஆனந்தித்தல் என்னும் ஐந்தொழில்களையும் செய்கின்ற கன்மேந்திரியங்களும் நானன்று. சுவாசாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. சர்வ வி"யங்களும் சர்வ தொழில்களும் அற்று, வி"ய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி யிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்." "நானார் என்னும் விசாரணையிலேயே மனம் அடங்கும்; நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்." இதன் பின் மகரிஷிகளின் அருளுக்குப் பாத்திர மானவர்களுள் முக்கியமானவர் , காவ்யகண்ட கணபதி சாஸ்த்ரிகள் ஆவர். இவரது வரவு பல விதங்களில் விசேடம் வாய்ந்தது. கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று பெயர் படைத்தவர்; பெரிய கவி; வேதாந்தி. இவர் பன்னீரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றியும் கருதிய பலன் ஒன்றும் கிட்டாமல் மனம் வருந்தி நின்றார். 1907-ஆம் ஆண்டு ஒருநாள் திருவண்ணாமலைச் சுற்று வழியில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் இருந்தார். திடீரென்று, " பகவான் அழைக்கிறார்" என்று அசரீரி ஒன்று அழைப்பது போல் தோன்றியது.
உடனே இருக்கையை விட்டு எழுந்து கோவிலை நோக்கி நடந்தார். வழியிலே அருணாசலேசுவரர் ஊர்வலம் வருகிறார். சாஷ்டாங்கமாக அஞ்சலி செய்தார். ஆனால் அசரீரியின் அழைப்புக்கு அர்த்தம் புலப்படவில்லை.
சஞ்சலமடைந்த மனத்துடன் இருந்த அவருக்கு மறுநாள் மத்தியானம் மலைமீதுள்ள சுவாமிகளின் ஞாபகம் வந்தது. உக்கிரமான வெயிலையும் கவனியாமல் உடனே மலைமீது ஏறிச் சென்றர். அன்று அதிர்ஷ்ட வசமாக விருபாக்ஷிக் குகையின் தாழ்வாரத்தில் சுவாமிகள் தனியே அமர்ந்திருந்தார். கணபதி முனிவர் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து தம் இரு கரங்களாலும் சுவாமிகளின் அடிகளைப் பற்றிக்கொண்டு சரண் புகுந்தார். " கற்க வேண்டிய யாவையும் கற்றேன்; வேதாந்த சாஸ்த்திரங்கள் யாவையும் பயின்றேன்; மனங்கொண்டமட்டும் மந்திரங்களைச் செபித்தாகி விட்டது.ஆனாலும் தபஸ் என்பதின் தாத்பர்யம் தெரியவில்லை ஐயனே! உனது அடியினைச் சரண் அடைந்தேன்." என்று இறைஞ்சினார்.
சுவாமிகள் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை கணபதி முனிவரைக் கருணையுடன் நிச்சலமாகக் கடாக்ஷித்து இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார்: "நான், நான்" என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ் ஒரு மந்திரத்தை செபம் பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ். இவ்வருள் வாக்கு, இத்திவ்ய உபதேச மொழிகள் கணபதி முனிவரின் ஐயங்கள் யாவையும் தீர்த்துவிட்டன. குகையிலேயே அன்று இரவுவரை தங்கினார். பக்கத்தில் உள்ளவரிடம், ரமண மகரிஷிகள் என்பதே சுவாமிக்குப் பொருத்தமான பெயர் என்று வெளியிட்டார். "மறுவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக" என்று பாடி, "இனிமேல் பகவான் என்றே பக்தர் யாவரும் மகரிஷிகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார். அன்று முதல் இப்பெயர்கள் நிலைத்துவிட்டன. மகரிஷிகளைச் சேர்வதற்கு முன்னமேயே காவ்யகண்டர் பிரசித்திபெற்றவர். அவரைப் பின்பற்றும் பக்தர்கள் பலர் இருந்தனர்.
ஆகவே காவ்ய கண்டரின் வருகைக்குப் பின் மகரிஷிகளின் தரிசனத்துக்கு வருபவர்களின் தொகை அதிகரித்தது. இப்போது பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன. மகரிஷிகள் அருளிய விடைகளின் முக்கியமான பாகங்களைத் தொகுத்துச் சுலோகங்களாக அமைத்து ", ரமண கீதை" என்னும் நூலாக வெளியிட்டார், காவ்ய கண்டர். கணபதி முனிவர் சுவாமிகளிடம் நெருங்கிய அன்பு பூண்டவர். மகரிஷிகளிடம் அவர் கண்ட அற்புத சக்திகள் பல. 1906-ஆம் ஆண்டு காவ்யகண்டர் திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் தவம் செய்துகொண்டிருந்தர். திடீரென்று ஓர் இடத்தில் சந்தேகம் தோன்றியது. " மகரிஷிகள் அருகிருந்தல் இந்தச் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!" என்று மனதில் நினைத்தார். அக்கணமே மகரிஷிகள் உள்ளே நுழைவதுபோல் தோன்றியது. சாஷ்டாங்கமாக வீழ்ந்து அடிபணிந்தார்.
மகரிஷி தமது திருக்கரத்தால் அவர் தலையைத் தொட்டு அழுத்தினார். மின்சாரம் போன்றதோர் புதிய சக்தி தன்னுள் பாய்வதுபோன்று முனிவர் உணர்ந்தார்.மகரிஷிகளின் திருக்கரத்தால் ஹஸ்த தீட்சை பெற்றுவிட்டதை உணர்ந்த முனிவர் மகிழ்ந்தார். இதைப் பற்றிப் பின் மகரிஷிகள்கூறிய விவரமும் இதை ஒத்து இருக்கிறது. பகவான் அருளியதாவது: "ஒரு நாள் படுத்துக்கொண்டிருந்தது; சமாதியில் இல்லை.
திடீரென்று சரீரம் ஆகாயத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. சுற்றும் உள்ள பொருட்கள் யாவும் மறைந்தன.எங்கும் ஒரே வெண்§f¡தி. பிறகு சரீரம் ஓர் இடத்தில் இறங்கியதும் பொருள்கள் புலப்பட்டன.திருவொற்றியூரில் இருப்பதாக ஓர் எண்ணம் உதித்தது. ஒரு பெரிய ரஸ்தாவைப் பின்பற்றிச் செல்லுகையில், கொஞ்ச தூரம் தள்ளி ஒரு கணபதி கோயில் காணப்பட்டதும் உள்ளே சென்றது. அங்கே பேசியது உண்டு; என்ன பேசியது; என்ன செய்தது என்பது நினைப்பில் இல்லை. திடீரென்று விழித்த போது விரூபாக்ஷிகுகையில் படுத்திருந்தது. இப்படித் தான் சித்தர்களும் உலாவுவார்கள் என்று தெரிந்தது." இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மகரிஷிகள் திருவொற்றியூருக்குச் சென்றதே இல்லை. ஆனால் மகரிஷிகள் சொன்ன அடையாளங்கள் யாவும் காவ்யகண்டர் அச்சமயத்தில் வசித்துவந்த கோயிலுக்குப் பொருத்தமாகவே இருந்தன.
காவ்யகண்டர் மகா மேதாவி; பண்டித சிரோமணி; அறிவிற் சிறந்த கவி. பல மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற புலவர்.ஆனாலும் மகரிஷிகளிடம் உள்ள அபார பக்தியினால் தனது சிறப்பனைத்துக்கும் காரணம் தமது குருதேவரான மகரிஷியின் அருளே என்று கூறுவார். அற்புதமான யோக அநுபவங்கள் பல இவருக்கு நேர்ந்தன. 1922-ஆம் ஆண்டில் மாமரக் குகையிலிருந்து யோகம் செய்த போது கணபதி முனிவருக்கு ஒரு நாள் கபாலம் வெடித்து தழும்பும் ஏற்பட்டது.
அந்தோ! உன்னத குறிக்கொள்களைக் கொண்ட இப்பெரியார், சிறந்த தபஸ்வி, சீரிய அறிஞர், வெகுநாள்வாழ்ந்திருக்க இந்நாடு பாக்கியம் பெறிருக்கவில்லை. 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று கல்கத்தாவை அடுத்த கரக்பூருக்கு அருகில், நிம்புரா என்னும் இடத்தில் உள்ள ஆசிரமத்தில் இவர் பூத உடலை நீத்தார்.
இதர பக்தர்கள் - பாகம் 7
அக்காலத்து பக்தர்களுள் திருவண்ணாமலையில் சூபர்வைசராக இருந்த திரு இராமசாமி ஐயர் என்பவரும் ஒருவர். பகவானது சந்நிதானத்துக்கு வந்த இரண்டாம் முறையே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. வணங்கி வீழ்ந்து வேண்டுவாராயினர், "சுவாமி ஏசுநாதர் போன்ற மகான்கள் பாவிகளைக் கரையேற்றவே இவ்வுலகில் தோன்றினர். எளியேனுக்குக் கடைத்தேற வழியில்லையா? உய்வில்லையா?"
சுவாமிகளிடம் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. முதலில் நான் சுவாமிகளிடம் போவதை விரும்பாத என் குடும்பத்தினர் என் பிணி நீங்கியதைக் கண்டதும் பகவான் சந்நிதானத்துக்கே தினந்தோறும் அன்னம் அனுப்பஆரம்பித்தனர். 'அடடா!' எத்தனையோ மருந்துகளுக்கு எவ்வளவோ ரூபாய் செலவழித்தோமே! முன்னமேயே இவரது பெருமையை உணராமல் போனோமே' என்று தோன்றியது.
வீட்டில் வசிக்க மனம் சகிக்கவில்லை. வீட்டைத் துறந்து, தீர்த்த யாத்திரையாகக் கோகர்ணத்துக்குச் சென்றார். வடநாட்டிலேயே பல சாதுக்களை அடுத்து சேவை செய்தார். ஆனால் மனத் துயரம் சிறிதும் ஆறவில்லை.
மாலையும் வந்தது. பிறகு சற்று சமாளித்துக் கொண்டு பிரியாமல் பிரிந்து சென்றார். சுவாமிகளின் அருளால் தம் துயர் எல்லாம் மறைந்துவிட்டதாகக் கூடவந்த தோழியிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்.
'இண்டர்நேசணல் சைக்கிக் கெசட்' என்ற பதிரிக்கையில் பிரசுரமாயின. இதன் பிறகு திரு கம்ப்ரீசு தன் வேலையை உதறிவிட்டு கதோலிக்க சந்நியாசி ஆகிவிட்டார். இவர்களின் உரையாடல்களில் சில பாகங்களைக் கீழே காணலாம்:
1900-ஆம் ஆண்டு அன்னையின் மூத்த புதல்வன் மரனமடைந்தார். மைத்துனரும் காலம் சென்றார். பிரிவினையாகாத ஏழைக்குடும்பம் வறுமையில் சிக்கியது. பின்னர் நாக சுந்தரத்தின் இளமனைவியும் ஓர் ஆண் மகவை விட்டுவிட்டுப் பரகதி அடைந்தாள். இப்படிப்பட்ட பெரும் வியாகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படவே அன்னையின் மனம் மாறிற்று; வீட்டைத் துறந்து இரண்டாவது புதல்வன் மீது மனம் சென்றது; 1916-ல் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு சுவாமிகள் கந்தாசிரமத்தில் வசிக்கலானார். அது சற்று விசாலமான இடம். இங்கே வந்த பின்னர் அன்னை சமையல் கைங்கரியத்தைத் தாமே மேற்கொண்டு தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார். அதிதிகள் அனைவருக்கும் அன்னம் படைக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆசிரமத்தில் ஏற்பட்டது.
அன்னையின் மகா சமாதி - பாகம் 10
ரஸ்தாவுக்கு அப்பால் ஒரு குகை செய்து, பூ மேனியை இருத்தி உட்காரவைத்து, ஏராளமாக விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றைக் கொட்டினர். அதன் மேல் சமாதி கட்டி ஒரு லிங்கம் ஸ்தாபித்தனர்.
அனைவருக்கும் எது பரிமாறப்படுகிறதோ அதை மட்டுமே, அதிலும் குறைந்த அளவிலேயே, தாம் ஏற்றுக்கொள்வார். அவர் சந்நிதியில் யார் எதைக் கொண்டுவந்து சமர்ப்பித்தாலும் அது அவ்வப்போதே அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டு வினியோகிக்கப்படும். பசு, நாய், குரங்கு, அணில், மயில் முதலிய சகல ஜந்துக்களுக்கும் அங்கு அத்தகைய சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட்டு வந்தன. 'பசு லக்ஷிமி' ஆசிரமத்தின் செல்வ மகள் போல் வாழ்ந்து இறுதியில் பகவானது ஹஸ்த தீக்ஷையுடன் 18-06-1948 இல் முக்தியடைந்தாள்.
ஆசிரமத்தின் ஆதிக்காலத்தில் கள்வர் சிலர் நடுநிசியில் வந்தபோதுங்கூட,பகவான், " உள்ளேவந்து வேண்டியதை எடுத்துப்போகலாமே " என்று வரவேற்பளித்தனரென்றால், அவரது வெற்ற வெளி வாழ்வுக்கு வேறென்ன சான்று வேண்டும்?
கள்வருக்கும் கருணை -பாகம் 12
1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளே
உலகங்கவர்ந்த உத்தமர் - பாகம் 13
இந்தியர்-வெள்ளையர், என்ற இன வேறுபட்டையும்,இந்து-கிறிஸ்தவர்-முகம்மதியர்-பௌத்தர்-ஜைனர்-சீக்கியர் என்ற மதவேறுபாட்டையும் மறந்து, மக்கள் பலரும் வெகு தொலைவிலிருந்தும் வந்து, இந்த ஞான வள்ளலையடுத்துத் தத்தமது மத குருஇவரே என்று போற்றிப் பணியலாயினர். அவர்களுள்ள்ளும் உத்தமப் பக்குவிகளான எத்தனையோ பேர் ஸ்ரீ ரமண தரிசன மாத்திரத்தாலும், அவரது சந்நிதி விசேடத்தாலும், அருகிலிருந்து தொண்டாற்றியும், உபதேசங்களைக் கடைப்பிடித் தொழுகியும் மெய்யறிவு விளக்கமுற்றனர்.
அவர் விடை பெறும் போது பகவானை அணுகி, " பகவன், காந்திஜியே என்னை இங்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நான் தங்களிடமிருந்து கொண்டுசெல்ல ஏதேனும் செய்தி யுளதோ?" என்று வினயமாய் வேண்டி நின்றார்.
தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, 'இவ்வுடலே நான்' என்று கருதுவதால் தான் 'சுய நலம்' என்ற சொல் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. "சகல உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்" என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில்'சுய நலம்' என்பது சகல உயிர்களின் நலமே ஆகிறதல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும்.
நாம் எதை அறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னையறிய விரும்புவோர் தன்னையே நாடவேண்டும்.
விழிப்பில் இத் தன்னுணர்வு "நான் உடலாக இருக்கிறேன்; நான் மனிதனாக இருக்கிறேன்; நான் இன்னாராக இருக்கிறேன்" என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவ போதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம்.
இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உருவாகின்றன. முன்னிலை படர்க்கைகளை நாட நாட மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக் கொண்டே போகும். தன்மை உணர்வாகிய 'நான் இன்னாராக இருக்கிறேன்' என்ற அகந்தை வடிவத்தை இதன் இருப்பு எத்தகையது என்று நாட வேண்டும்.
ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன. 19-12-'49 இல் நான்காவது முறையாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்துங் கூட நோய் தணியவில்லை. அவ் வறுவைச் சிகிச்சையின் போது மயக்க மருந்து கூடக் கொடுக்க வேண்டாம் என்று பகவான் தடுத்துவிட்டார். "வலி இல்லையா? " என்று பக்தர் ஒருவர் பகவானிடமே கேட்டார். அதற்கு விடையாக "வலியும் நமக்கு அன்னியமல்லவே" என்றார் பகவான். நாக்கைக் கடிக்கும் பற்கள் எப்படி நமக்கு அன்னிய மல்லவோ, ரமணரை அடித்த கள்வர்கள் எப்படி அவருக்கு அன்னியராகத் தோன்றவில்லையோ, அப்படியே உடலை உழற்றும் நோயும் வலியும் கூட 'நானே' என்ற அனன்னிய ஆத்ம பாவமே அவரது அதிசயிக்கத் தக்க ஞான நிலையாக யிருந்தது.
1950-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, இரவு மணி 8-47க்கு, உடல் பத்மாசனம் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் திரு மேனியை ரமணாசிரமத்தில் அப்பெருமான் வாழ்ந்திருந்த அறைக்கும், அன்னையின் ஆலயத்திற்கும் இடையிற் சமாதி செய்வித்து ஸ்ரீ ரமண லிங்க மூர்த்தியைப் பிரதிஷ்ட்டை செய்வித்தனர்.
அதன்மேல் அழகிய மணி மண்டபாலயம் ஒன்று நிருமாணிக்கப்பெற்று 18-06-'67 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அச் சந்நிதியின் முன் பாகத்தில் உற்சவாதிகள் நடை பெறுவதற்கான ஒரு பெரிய சபா மண்டபமும் அமைக்கப்பட்டது."தான் இவ்வுடலல்ல; உள்ள பரம் பொருளே தான்" என்ற மகானுபவியான பகவான் ஸ்ரீ அருணாசல் ரமணரது அருட் சந்நிதி, ஞான தாகமெடுத்த உலகிற்கு மோனமாக என்றென்றும்அருளமுதம் ஊட்டி வருகின்றது.
|
| Last Updated on Sunday, 26 July 2009 18:28 |
பிற வளங்கள்



















