Sunday 19th of May 2013

Home மூலிகைகள், மருத்துவம் மூலிகைமணி வேங்கடேசன் கண்ணப்பர் - II
மூலிகைமணி வேங்கடேசன் கண்ணப்பர் - II PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 08 May 2010 23:05

மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி

பகுதி 2

பேட்டி: திரு.அ.சுகுமாரன், சுபாஷினி ட்ரெம்மல்

ஒலி, காணொளிப்பதிவு: சுபாஷினி ட்ரெம்மல்

பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009

 

 

 

பாகம் 7 :

 

திருமூலர் பாடல்களில் சுவாசங்கள் பற்றிய விளக்கம், சித்தர்களின் கருத்துக்கள் சித்தர்களின், சிவம் சக்தி எனும் இரு கூறுகள், மருந்து செய்யும் முறைகளில் நாதம் விந்து என்னும் கருத்துக்களின் அடிப்படையில் மருந்து தயாரிக்கப்படும் உத்திகள் ஆகியற்றை இந்தப் பகுதியில் கேட்கலாம்.

 
பகுதி 8. 

மருந்து செய்யும் முறைகளில் சில உதாரணங்கள்; சத்ரு-மித்ரு - அமிர்தம் -நஞ்சு, கருத்துக்கள், உறக்கத்தின் போது உடலிலிருந்து நஞ்சு வெளியேறும் தன்மைகள், உலகத்திற்கு சித்தர்கள் கொடுத்த மருந்துகள், சித்தர்கள் பார்வையில் ஆயுள் விருத்தி விளக்கம், உயிர் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு சித்தர்கள் காட்டிய வழி போன்ற கருத்துக்களை எளிமையாக விளக்கப்படுவதை இந்தப் பதிவில் கேட்கலாம்.
 
திரு.சுகுமாரன் மருத்துவர் வேங்கடேசனுடன்
 
பகுதி 9. 

சரியை, கிரியை, யோகம், ஞானம் விளக்கம்,  உடம்பு அழியும் போது உயிர் அழிகின்றதா? இயற்கை மயமாதல் பற்றி சித்தர்களின் சிந்தனை,  உயிரின் நான்கு விதமான பயணங்களைப் பற்றிய விளக்கங்கள் இந்தப் பகுதியில் கேட்கலாம்.
 
பகுதி 10. 

சித்தர்கள் நமக்கு காட்டியுள்ள வழிகள், இறை சக்தியுடன் உயிர்கள் தொடர்பு கொள்ளும் வழி, டாக்டர் நாகசுவாமி அவர்களின் தொல்பொருள் ஆய்வுக்கு ஓலைச்சுவடி வாசிப்பு அனுபவங்கள், சுவடியில் உள்ள செய்திகளின் அடிப்படையில் கல்வெட்டுக்களின் செய்திகளை அறிந்து கொண்ட செய்திகள்,  மருத்துவர் வேங்கடேசன் தனக்கு கட்டுமருந்து கிடைத்த விதம் ஆகிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் பதுதி இது.
 
 
மருத்துவர் வேங்கடேசனின் தாயார்

 
பகுதி 11.  
 
கட்டுமருந்துகள்,தங்கப் பஸ்பம் விளக்கம், சித்த மருத்துவத் துறையில் உலவி வரும் சில ஏமாற்றுத் தனங்கள், தனது அனுபவங்களைக் கூறுகின்றார்.   யோகி நிஷ்டை அடையும் வழிமுறைகளும் இந்தப்  பகுதியில் விளக்கப் படுகின்றன.  
 
பகுதி 12. 
 
கிரியா யோகத்தின் பலன்கள், சித்த மருத்துவத்தில் கோரக்கரின் பங்கு, யோக சித்திகள், விதி எனும் கருத்து, மனிதர்கள் வாழ்க்கையை எபப்டி அமைத்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கையின் நோக்கம் என்ன என சித்தர்கள் சிந்தனை அடிப்படையில் விளக்குகின்றார். 
 
சித்தர்கள்
 
பகுதி 13.  
துன்பம் - எதனால் ஏற்படுகின்றது? எது மங்களம் தரக்கூடியது? வாழ்க்கையின் நோக்கம்  என்ன ? மருத்துவர் வேங்கடேசன் தன்னைத் தானே அறிந்து கொண்ட அனுவத்தை விளக்குகின்றார். இந்தப் பகுதியில் இஞ்சியின் சிறப்பும் விளக்கப்படுகின்றது. 
 
பகுதி 14.  
 
மருத்துவர் வேங்கடேசன் தனது சித்தர்களின் அனுபவத்தை விளக்கும் பகுதி இது.
 
 
சுபா மருத்துவர் வேங்கடேசனுடன்
 
பகுதி 15. 
 
மூலிகைகளை பேட்டர்ன் செய்ய வேண்டிய நிலை இருப்பதையும் அதில் தனக்கு ஏறட்ட சிரமத்தையும் இந்த இறுதிப் பகுதியில் விளக்குகின்றார்.
 
 
Last Updated on Saturday, 08 May 2010 23:24
 

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2013  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
2728293031  

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved