புனைபெயர்கள்: தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி
பிறப்பு: 30-6-1930
தொழில்: ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி.
முகவரி: LC255, Jalan Naib Long, 849000 Tangkak.
எழுத்து:
1948 முதல் எழுதி வரும் இவர் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஆவார். அதிகம் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிதைகளும் நாடகமும் எழுதியதுண்டு.
கட்டுரை: "மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு" (1978); "மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்" (1996).
கவிதை: "கவி மஞ்சரம்" (1976).
சிறப்புக் குறிப்புகள்: பட்டங்கள்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க விருதும் தங்கப் பதக்கமும். டத்தின் இந்திராணி இலக்கியப் பரிசு; மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை விருது, மாநில சுல்தானின் விருது ஆகியவை பெற்றவர்.